மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை.. பல்லடம் ஜமாபந்திக்கு பதாகைகளுடன் வந்த பெற்றோர்..!

நீங்கள் நிலத்திற்கு தனி பட்டா கொடுத்தால் மட்டுமே தன் மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நிலத்தை விற்று பணம் பெற முடியும் என்று, கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு பெற்றோர்கள் கோரிக்கை மனு வழங்கினர்.


திருப்பூர்: பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் நிலத்தை மீட்டு தங்கள் மகனுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிக்கரம் நீட்டுமாறு கையில் பதாகைகளுடன் வந்து பெற்றோர்கள் மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் வருவாய் தீர்வாயம் அலுவலர் மற்றும் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையிலான 1431 ஆம் பலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் இன்று பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் மனு அளித்தனர்.



மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த வித ஏற்பாடுகளும் செய்யாததால் கரைப்புதூர் கிராமத்திலிருந்து வந்த மாற்றுத்திறனாளி மகாதேவன் என்பவர் சக்கர நாற்காலி இல்லாததால் நுழைவு வாயிலில் இருந்து தவழ்ந்து வந்து இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக பல்லடம் வடுகபாளையத்தில் வசித்து வரும் ராஜகோபாலன் என்பவர் தனது பெயரில் உள்ள சொந்தமான நிலத்தை கடந்த பதிமூன்று வருடங்களுக்கு முன்பு பல்லடம் நகராட்சியால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும் 13 வருட போராட்டத்திற்கு பிறகு கூட்டு பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



தற்போது தனி பட்டா கேட்டு ராஜகோபாலன் குடும்பத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.



மேலும் தங்கள் நிலத்தை தனிப் பட்டா கொடுத்தால் மட்டுமே தன் மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நிலத்தை விற்று பணம் பெற முடியும் எனவும் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு குடும்பத்தினருடன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...