நீங்கள் நிலத்திற்கு தனி பட்டா கொடுத்தால் மட்டுமே தன் மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நிலத்தை விற்று பணம் பெற முடியும் என்று, கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு பெற்றோர்கள் கோரிக்கை மனு வழங்கினர்.
திருப்பூர்: பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் நிலத்தை மீட்டு தங்கள் மகனுக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிக்கரம் நீட்டுமாறு கையில் பதாகைகளுடன் வந்து பெற்றோர்கள் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் வருவாய் தீர்வாயம் அலுவலர் மற்றும் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையிலான 1431 ஆம் பலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் இன்று பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் மனு அளித்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த வித ஏற்பாடுகளும் செய்யாததால் கரைப்புதூர் கிராமத்திலிருந்து வந்த மாற்றுத்திறனாளி மகாதேவன் என்பவர் சக்கர நாற்காலி இல்லாததால் நுழைவு வாயிலில் இருந்து தவழ்ந்து வந்து இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தார்.
இதன் தொடர்ச்சியாக பல்லடம் வடுகபாளையத்தில் வசித்து வரும் ராஜகோபாலன் என்பவர் தனது பெயரில் உள்ள சொந்தமான நிலத்தை கடந்த பதிமூன்று வருடங்களுக்கு முன்பு பல்லடம் நகராட்சியால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும் 13 வருட போராட்டத்திற்கு பிறகு கூட்டு பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது தனி பட்டா கேட்டு ராஜகோபாலன் குடும்பத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

மேலும் தங்கள் நிலத்தை தனிப் பட்டா கொடுத்தால் மட்டுமே தன் மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நிலத்தை விற்று பணம் பெற முடியும் எனவும் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு குடும்பத்தினருடன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் வருவாய் தீர்வாயம் அலுவலர் மற்றும் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையிலான 1431 ஆம் பலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் இன்று பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் மனு அளித்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த வித ஏற்பாடுகளும் செய்யாததால் கரைப்புதூர் கிராமத்திலிருந்து வந்த மாற்றுத்திறனாளி மகாதேவன் என்பவர் சக்கர நாற்காலி இல்லாததால் நுழைவு வாயிலில் இருந்து தவழ்ந்து வந்து இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தார்.
இதன் தொடர்ச்சியாக பல்லடம் வடுகபாளையத்தில் வசித்து வரும் ராஜகோபாலன் என்பவர் தனது பெயரில் உள்ள சொந்தமான நிலத்தை கடந்த பதிமூன்று வருடங்களுக்கு முன்பு பல்லடம் நகராட்சியால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும் 13 வருட போராட்டத்திற்கு பிறகு கூட்டு பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது தனி பட்டா கேட்டு ராஜகோபாலன் குடும்பத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.
மேலும் தங்கள் நிலத்தை தனிப் பட்டா கொடுத்தால் மட்டுமே தன் மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நிலத்தை விற்று பணம் பெற முடியும் எனவும் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு குடும்பத்தினருடன் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.