கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் இரு சக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதி விபத்து - ஐ.டி ஊழியர் பலி…!

கோவையில் வீட்டில் இருந்து வேலை செய்து வந்த ஐ. டி ஊழியர், துடியலூர் பகுதியில் நண்பர்களை பார்த்துவிட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் சாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் தடுப்புச்சுவர் மீது மோதியதில் உயிரிழந்தார்.


கோவை: கோவையில் வீட்டில் இருந்து வேலை செய்து வந்த ஐ. டி ஊழியர், துடியலூர் பகுதியில் நண்பர்களை பார்த்துவிட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் சாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் தடுப்புச்சுவர் மீது மோதியதில் உயிரிழந்தார்.

கோவை வெள்ளலூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் இவரது மகன் தீக்க்ஷித் (26). சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தற்போது, வீட்டிலிருந்து வேலை செய்துவரும், தீக்க்ஷித் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துடியலூர் பகுதியில் குடியிருந்த நிலையில் தற்போது வெள்ளலூர் பகுதிக்கு வீடு மாற்றம் செய்துள்ளனர்.

இதனால், தீக்க்ஷித் தனது நண்பர்களை பார்ப்பதற்காக அடிக்கடி துடியலூர் சென்று வந்துள்ளார். நேற்று வழக்கம்போல், துடியலூர் சென்று தனது நண்பர்களை பார்த்துவிட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பின் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதையடுத்து, தீக்க்ஷித் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...