கோவையில் முன்னறிவிப்பு இன்றி குறுந்தொழில் கூடத்தை மாநகராட்சி அதிகாரிகள் மூடிவிட்டதாக TACT சங்கத்தினர் புகார் மனு..!

இடையர்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த குறுந்தொழில் கூடம் எவ்வித முன் அறிவிப்பின்றி மாநகராட்சி அதிகாரிகளால் மூடப்பட்டதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் TACT சங்கத்தினர் மனு கொடுத்தனர்.



கோவை: எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் குறுந்தொழில் கூடம் மாநகராட்சி அதிகாரிகள் மூடி விட்டதாகச் சிறு குறு தொழில் முனைவோர் புகார் தெரிவித்துள்ளனர்.



கோவை கவுண்டம்பாளையம்- இடையர்பாளையம் இடையே உள்ள செளடாம்பிகா நகரில் சுரேஷ் இன்ஜினியரிங் மற்றும் சதீஷ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சி அலுவலர்கள் மூடி விட்டதாகவும், இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் அந்த கம்பெனி செயல்பட வழிவகை செய்ய வலியுறுத்தியும், சிறுகுறு தொழில் முனைவோர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அச்சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய ஜேம்ஸ், கோவை மாவட்ட குறு சிறு தொழில்கள் நிறைந்த மாவட்டம், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு குறு சிறு தொழில்கள் நடைபெற்று வந்த நிலையில், தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை நாங்கள் சந்தித்து வருகிறோம்.



இந்நிலையில் கடந்த 21-ம் தேதியன்று கவுண்டம்பாளையம் பகுதி செளடாம்பிகா நகரில், நடைபெற்று வந்த குறுந்தொழில் கூடம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சி அலுவலர்கள் மூடிவிட்டனர்.

இது குறித்து அப்போதே மாநகராட்சி ஆணையரைச் சந்திக்க முயன்ற போது அவர் இல்லாததால் அவரது தொலைப்பேசிக்குக் குறுஞ்செய்தி அனுப்பினோம். ஆனால் எவ்வித பதிலும் இல்லை. எனவே மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அந்த கம்பெனியை திறக்க வழிவகை செய்ய வேண்டி வந்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...