பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு: நிர்மலா சீதாராமனுக்கு நன்றி சொன்ன கொடிசியா..!

மத்திய நிதி அமைச்சர்‌ நிர்மலா சீதாராமன்‌ வெளியிட்டுள்ள இரும்பு உள்ளிட்ட பொருட்கள்‌ மீதான சுங்க வரி மற்றும்‌ பெட்ரோல்‌, டீசல்‌ மீதான தீர்வை வரி குறைப்பு குறித்த அறிவிப்புக்கு கொடிசியா நன்றி தெரிவித்துள்ளது.


கோவை: மத்திய நிதி அமைச்சர்‌ நிர்மலா சீதாராமன்‌ அறிவித்துள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப்‌ பொருட்கள்‌ மீதான தீர்வை வரி குறைப்பு குறித்த அறிவிப்பை கொடிசியா வரவேற்கிறது. இதன்மூலம்‌ உற்பத்திப்‌ பொருட்களின்‌ தயாரிப்பு விலையை குறைக்க முடியும்‌.

இதுகுறித்து கோவை மாவட்ட கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு கூறியுள்ளதாவது:-

கடந்த 21ஆம்‌ தேதி நிதியமைச்சர்‌ வெளியிட்ட அரசாணையின்படி ஸ்டீல்‌ மூலப்பொருட்கள்‌ இறக்குமதி வரி குறைப்பு மற்றும்‌ இரும்பு மற்றும்‌ ஸ்டீல்‌ மூலப்‌ பொருட்கள்‌ ஏற்றுமதி வரி அதிகரிப்பு ஆகியவற்றால்‌ உள்நாட்டில்‌ மூலப்பொருட்களின்‌ விலை கணிசமாகக் குறைவது, சிறு குறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்களுக்குப் பயன்‌ அளிப்பதாகும்‌.

மேலும்‌ பெட்ரோலுக்கு லிட்டருக்கு 8 ரூபாயும்‌ டீசல்‌ 6 ரூபாயும்‌ குறைத்திருப்பது முறையே அவற்றின்‌ விலையை முறையே ரூபாய்‌ 9.50, ரூபாய்‌ 7 என விலையைக் குறையச்‌ செய்யும்‌. இதன்‌ மூலம்‌ போக்குவரத்து கட்டணங்கள்‌ குறைவதால்‌ சிறு, குறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்களோடு, சாதாரண குடிமகனும்‌ விலைவாசியைச் சமாளிக்க முடியும்‌. என கண்டிப்பாக நம்புகிறோம்‌.

மேற்சொன்ன மக்கள்‌ நல அறிவிப்புக்காக நிதியமைச்சரைப்‌ பாராட்டி நன்றி தெரிவிப்பதோடு, மேலும்‌ பெட்ரோல்‌, டீசல்‌ விலையைக்‌ குறைப்பதற்கான வாய்ப்புகள்‌ குறித்துப் பரிசீலிக்குமாறு தாழ்மையுடன்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...