இதில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை: கோவை தெற்கு வட்டம் மற்றும் வடக்கு வட்டத்திற்கான 14231-ம் பசலி ஆண்டிற்குரிய ஜமாபந்தி அந்தந்த தாலுகா அலுவலகத்தில் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதில் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் ஜமாபந்தி நிகழ்ச்சி வரும் 26-ம் தேதி தாலுகா அலுவலகத்தில் தொடங்க உள்ளது. முதல் நாள் ஜமாபந்தியில் ராமபட்டிணம் உள்வட்டத்திற்குட்பட்ட கிராம மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகிறது.
27-ம் தேதி பொள்ளாச்சி வடக்கு உள்வட்டம், 31-ம் தேதி பொள்ளாச்சி தெற்கு உள்வட்டம், ஜூன் 1-ம் தேதி பெரிய நெகமம் உள்வட்டம், 2-ம் தேதி கோலார்பட்டி உள்வட்டங்களுக்கு ஜமாபந்தி நடக்க உள்ளது. இதேபோல, வரும் 26-ம் தேதி ஆனைமலை தாலுகாவில் ஆனைமலை உள்வட்டத்துக்கும். 27-ம் தேதி மார்ச்சநாயக்கன்பாளையம் உள்வட்டம், 31-ம் தேதி கோட்டூர் உள்வட்டத்திற்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
இந்த ஜமாபந்தியின் போது வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாகவும், நலத்திட்ட உதவிகள் தொடர்பாக பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் ஜமாபந்தி நிகழ்ச்சி வரும் 26-ம் தேதி தாலுகா அலுவலகத்தில் தொடங்க உள்ளது. முதல் நாள் ஜமாபந்தியில் ராமபட்டிணம் உள்வட்டத்திற்குட்பட்ட கிராம மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகிறது.
27-ம் தேதி பொள்ளாச்சி வடக்கு உள்வட்டம், 31-ம் தேதி பொள்ளாச்சி தெற்கு உள்வட்டம், ஜூன் 1-ம் தேதி பெரிய நெகமம் உள்வட்டம், 2-ம் தேதி கோலார்பட்டி உள்வட்டங்களுக்கு ஜமாபந்தி நடக்க உள்ளது. இதேபோல, வரும் 26-ம் தேதி ஆனைமலை தாலுகாவில் ஆனைமலை உள்வட்டத்துக்கும். 27-ம் தேதி மார்ச்சநாயக்கன்பாளையம் உள்வட்டம், 31-ம் தேதி கோட்டூர் உள்வட்டத்திற்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.
இந்த ஜமாபந்தியின் போது வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாகவும், நலத்திட்ட உதவிகள் தொடர்பாக பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.