தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பறிப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே திராவிடர் கழக இளைஞரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே திராவிடர் கழக இளைஞரணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கிப்பணிக்களுக்கு தமிழ் பாடம் கட்டாயம் அல்ல என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து, தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட திராவிடர் மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் இராகுலன் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசின் ரயில்வே, வங்கிப்பணி, அஞ்சல் துறை என அனைத்து துறைகளில் இந்தி மொழியை திணித்து தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பறிப்பதாக கூறி கோஷங்களை எழுப்பினர்.
மேலும் மத்திய அரசு வேண்டுமென்றே தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் வேலைகளை செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.