கோவையில் வார்டு எண் 81க்கு உட்பட்ட பகுதிகளில் 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு ரூ.6000 வரையில் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.81-க்கு உட்பட்ட ராஜ வீதி, ரங்கே கவுடர் வீதி, டி.கே.மார்க்கெட் பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தனபால், சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து, அந்தப் பகுதிகளில் 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.6,000/- அபராதம் விதிக்கப்பட்டது.