அரசு பள்ளிகளுக்கு 50 லட்சம் செலவில் இருக்கைகள், மேசைகள், பீரோ வழங்கிய வால்பாறை எம்.எல்.ஏ!

வால்பாறையில் அரசு பள்ளிகளுக்கு 50 லட்சம் செலவில் இருக்கைகள், மேசைகள், பீரோ போன்ற பொருட்களை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வாட்டர் பால்ஸ், ரொட்டிகடை, வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோலையார் அணை மேல்நிலைப்பள்ளி போன்ற அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

மாணவ மாணவிகளுக்கு வகுப்பறையில் இருக்கைகள் மேசைகள் பீரோ போன்ற பொருட்கள் பழுதாகி பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் பள்ளி மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வந்தனர்.

இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடங்களாக எம்எல்ஏ மேம்பாட்டு நிதி வழங்கப்படாத சூழ்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு தேவையான பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் இன்று வழங்கினார்.



இதில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 50 லட்சம் ஒதுக்கீடு செய்து மலைப்பகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் வகுப்பறைகளுக்கு தேவையான இருக்கைகள், மேசைகள், பீரோக்கள் ஆகிய தளவாட பொருட்களை வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன் ராஜிடம் வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி வழங்கினார்.

இந்த நிகழ்வில் நகர செயலாளர் மயில் கணேசன், 17 வது கவுன்சிலர் மணிகண்டன், சௌந்தராஜன், sks பாலு, சுடர் பாலு, மோகன், சண்முகம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...