வசூல் வேட்டையில் கந்து வட்டிக்காரர் - 50-ஆயிரம் கடனுக்கு 6-லட்சம் வட்டி? கோவை ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர் மனு..!

50 ஆயிரம் ரூபாய் கடனுக்கு, 6 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு, வங்கி புத்தகம், ரேசன் கார்டு, ஏடிஎம் கார்டை திருப்பி தராமல், மிரட்டும் கந்து வட்டிக்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூய்மைப் பணியாளர் மகன் ஆட்சியரிடம் மனு.


கோவை: சிங்காநல்லூரில் உள்ள கந்து வட்டிக்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூய்மைப் பணியாளர் மகன் ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் சி எம் சி காலனியை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (55). தூய்மை பணியாளராக மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த

இவரது மனைவி கமலா உடல் நலக்குறைவால், மூன்று வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி.

இந்நிலையில், வெள்ளிங்கிரிக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

அவரது மருத்துவ செலவிற்கு கந்துவட்டிக்காரர் மனோகர் என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார். இதற்கு, பதிலாக வெள்ளிங்கிரி மற்றும் அவரது மனைவி கமலாவின் வங்கி புத்தகம், ஏ.டி.எம் கார்டு, ரேசன் கார்டு உள்ளிட்டவைகளை அடமானமாக வைத்துள்ளனர்.

மேலும், அவரது மனைவி கமலா இறந்த போது, அவருக்கு வந்த பணப்பலன்கள் சுமார் 6 லட்சத்தை பைனான்சியர் மனோகர் எடுத்துக் கொண்டதாகவும், மேலும் வெள்ளிங்கிரியின் ஏ.டி.எம் கார்டு மூலமாக மாத மாதம், மனோகர் பணம் எடுத்துக் கொண்டுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.



தற்போது, வெள்ளிங்கிரியின் மருத்துவ சிகிச்சைக்காக அவரது மகன் பணம் கேட்ட போது, மனோகரன் உங்க அப்பன் செத்தா எனக்கு என்ன? எனக்கு வட்டியோட அனைத்தையும் வாங்கி செல், என மிரட்டியதாக அவரது மகன் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்துள்ளார்.

மேலும், பல லட்சங்களை வாங்கிக்கொண்டு, தங்களை துன்புறுத்தும் மனோகரன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தந்தை மற்றும் அம்மாவின் வங்கி புத்தகங்களையும், ஏடிஎம், ரேசன் கார்டுகளையும், கந்துவட்டி கும்பலிடம் இருந்து மீட்டுத் தருமாறு ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...