தக்காளி விலை கிடுகிடு உயர்வு - கோவையில் திருமண விழாவில் மணமக்களுக்கு தக்காளி பரிசு!

தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், கோவை குனியமுத்தூர் பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் மணமக்களுக்கு தக்காளி பரிசளித்த சம்பவம் உறவினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.



கோவை: கடந்த சில தினங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

உள்ளூரில் போதிய விளைச்சல் இல்லாததால், வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்யப்படுவதால் படிப்படியாக தக்காளி விலை உயர்ந்து தற்போது கோவையில் கிலோ ரூ.95 க்கு தக்காளி விற்பனையாகி வருகிறது. இதனால் குறைவான அளவே பொதுமக்கள் தக்காளி வாங்கி வருகின்றனர்.

உணவு சமைப்பதற்கான காய்கறிகளில் தக்காளியின் பங்கு மிக முக்கியமாக இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தெற்கு நகர இளைஞரணியை சேர்ந்த அக்கீம் மகள் அப்சானா மற்றும் ஹாரீஸ் திருமண நிகழ்ச்சி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்கம் இளைஞரணி நிர்வாகிகள் திடீரென மணமக்களுக்கு தக்காளி பரிசு வழங்கியுள்ளனர்.



மணமக்களுக்கு தக்காளி பரிசாக வழங்கப்பட்ட வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், பரிசு பொருளாக கொடுக்கும் வகையில் விலைவாசி உள்ளது என்பதை உணர்த்தும் வகையிலும் இந்த பரிசை கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...