மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கோவை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் சுப்பிரமணி (37). இவர் ஈமு கோழி மோசடி வழக்கில் கடந்த 2017 -ல், கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுப்பிரமணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சிறை காவலர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுப்பிரமணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சிறை காவலர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.