கோவையில் போலீசார் தேடுதல் வேட்டை - உக்கடத்தில் தடை செய்யப்பட்ட 1 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் - 3 பேர் கைது!

கோவை உக்கடம் பகுதியில் தடை செய்யப்பட்ட 1 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததோடு போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.



கோவை: தமிழகம் முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் ஆபரேஷன் 2.0 என்ற பெயரில் கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தில் தொடர்ந்து குட்கா மற்றும் கஞ்சா பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.



இந்நிலையில் உக்கடம் லாரி பேட்டை அருகே அதிகாலை 3.30 மணி அளவில் உக்கடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாரி பேட்டைக்கு வந்த லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மூட்டை மூட்டைகளாக குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் வந்த கரும்பு கடையை சேர்ந்த ஆஷிக் (25), மொய்தீன் (28) மற்றும் காரமடையை சேர்ந்த தேவேந்திரன் (50) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.



முதல்கட்ட விசாரணையில் வடமாநிலத்தில் இருந்து கோவையில் சில்லறை விற்பனைக்கு குட்கா பொருட்கள் எடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த குட்கா பொருட்களின் உரிமையாளர் யார்? எங்கிருந்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...