கோவை மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் செந்தில் வேலவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் சேகர்பாபு, கோயில் கட்டிடங்கள், கோயிலின் தேவைகள், பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டு வரும் அடிப்படை தேவைகள், அன்னதானக் கூடத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு, பக்தர்கள் தங்கும் கூடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக வசதிகள் போன்றவை குறித்து பக்தர்கள் மற்றும் அலுவலரிடம் கேட்டறிந்தார்.
பின்னர் வெள்ளியங்கிரி மலைக்கு நடைபாதையாக சென்று மலை பாதைகளை பார்வையிட்டார்.