பொள்ளாச்சி அருகிலுள்ள மீனாட்சிபுரம் என்ற பகுதியில் காதலன் அடித்ததால் மனமுடைந்த காதலி கடந்த 12ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி.
இவரது மகள் தமிழரசி (19). இவரும் அதே பகுதியை சேர்ந்த கவின்குமார் (21) என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி அன்று கவின்குமார் தமிழரசியை தொலைபேசியில் அழைத்துள்ளார். அவர் தொலைபேசி எடுக்காததால், வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவர் தமிழரசியை தாக்கியதாக தெரிகிறது.
இதில் வருத்தமடைந்த தமிழரசி வீட்டிற்குள் சென்று தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார். பின்னர், அவரது உறவினர்கள் அவரை மீட்டு அம்பராம் பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 16ம் தேதி வரை அங்கு சிகிச்சை பெற்ற அவரின் உடல்நிலை மோசமானதால், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த தமிழரசி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தமிழரசியின் தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில், ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள கவின்குமார் மற்றும் அவரது உறவினர்களை தேடி வருகின்றனர்.
இவரது மகள் தமிழரசி (19). இவரும் அதே பகுதியை சேர்ந்த கவின்குமார் (21) என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி அன்று கவின்குமார் தமிழரசியை தொலைபேசியில் அழைத்துள்ளார். அவர் தொலைபேசி எடுக்காததால், வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவர் தமிழரசியை தாக்கியதாக தெரிகிறது.
இதில் வருத்தமடைந்த தமிழரசி வீட்டிற்குள் சென்று தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார். பின்னர், அவரது உறவினர்கள் அவரை மீட்டு அம்பராம் பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 16ம் தேதி வரை அங்கு சிகிச்சை பெற்ற அவரின் உடல்நிலை மோசமானதால், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த தமிழரசி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தமிழரசியின் தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில், ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள கவின்குமார் மற்றும் அவரது உறவினர்களை தேடி வருகின்றனர்.