பஞ்சு விலை உயர்வு: சிறு நூற்பாலைகள்‌ உற்பத்தி நிறுத்தம்‌: தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேஷன் தலைவர் தகவல்..!

பஞ்சு கொள்முதல்‌ செய்வதற்கு நடப்பு மூலதனத்தில்‌ பற்றாக்குறை ஏற்பட்டு, பஞ்சை கொள்முதல்‌ செய்ய முடியவில்லை என தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேஷன் தலைவர் ஜெ.செல்வன் கூறியுள்ளார்.


கோவை: தமிழ்‌ நாட்டில்‌ கடந்த ஐந்து மாதங்களாக வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வை சிறு நூற்பாலைகள்‌ சந்தித்து வருகிறது.

இதுகுறித்து தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேஷன் தலைவர் ஜெ.செல்வன் கூறியிருப்பதாவது:-

கடந்த ஜனவரி 2022-ல்‌ 356 கிலோ கொண்ட ஒரு கண்டியின்‌ விலை ரூ. 75,000/- ஆக இருந்தது. தற்போது படிப்படியாக உயர்ந்து, இன்றைக்கு (21.05.2022) பஞ்சின்‌ விலை சராசரியாக ரூ. 1,15,000 ஆக உள்ளது.

அதேபோல்‌ ஜனவரி 2022-ல்‌ ஒரு கிலோ நூலின்‌ விலை ரூ. 328/- ஆக இருந்தது. இன்றைக்கு

(21.05.2022) ஒரு கிலோ நூலின்‌ விலை ரூ. 399/- ஆக உள்ளது. இதனை கணக்கிடும்‌ போது, சிறு நூற்பாலைகளுக்கு ஒரு கிலோவிற்கு ரூ. 50/- முதல்‌ ரூ. 60/- வரை நஷ்டம்‌ ஏற்படுகிறது.

மேற்கண்ட விவரம்‌ கீழே உள்ள அட்டவணையில்‌ விவரிக்கப்பட்டுள்ளது.

Month and year - Cotton Price per candy (356 Kgs) - Yam Price per kg

January 2022- Rs. 75,000/-- Rs. 328/-

May 2022- Rs. 1,15,000/-- Rs. 399/-

Increase in %- 53%- 21%

அபரிமிதமான பஞ்சு விலை உயர்வுக்கு, இவ்வாண்டு மிகவும்‌ குறைந்த பருத்தி உற்பத்தியே காரணம்‌. நமது நாட்டின்‌ பருத்தி உற்பத்தியின்‌ விளைச்சலை துள்ளியமான அளவிடுவதற்கு, அரசாங்கத்திடமோ, தனியாரிடமோ எவ்வித சரியான புள்ளி விவரங்கள்‌ இல்லை. பருத்தி சீசன்‌ ஆரம்பித்தவுடன்‌, பெரிய பஞ்சு வியாபாரிகளும்‌, பன்னாட்டு நிறுவனங்களும்‌ (Multi National Compznies-MNC) அதிக அளவில்‌ பஞ்சை கொள்முதல்‌ செய்து இருப்பு வைத்துக்‌ கொண்டார்கள்‌.

மேலும்‌, வெளிநாட்டிற்கும்‌ பஞ்சு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சு விலை கடுமையாக

உயர்ந்து விட்டதால்‌, எங்களது உறுப்பினர்களிடம்‌ பஞ்சு கொள்முதல்‌ செய்வதற்கு நடப்பு மூலதனத்தில்‌ பற்றாக்குறை ஏற்பட்டு, பஞ்சை கொள்முதல்‌ செய்ய முடியவில்லை. பல சிறு நூற்பாலைகள்‌ தங்களது நடப்பு மூலதனம்‌ முற்றிலும்‌ கரைந்து உள்ளது.

இந்த அசாதாரண சூழ்நிலையில்‌, நேற்று (20.05.2022) அன்று எங்களது சங்கத்தின்‌ அனைத்து உறுப்பினர்களின்‌ அவசர ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவுகள்:-

* பஞ்சு மற்றும்‌ நூல்‌ விற்பனை விலையில்‌ சீராகும்‌ வரை ஆலைகளை இயக்குவதில்லை என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

* இனி பஞ்சு கொள்முதல்‌ செய்வதில்லை.

இவ்வாறு தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் அசோசியேஷன் தலைவர் ஜெ.செல்வன் கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...