கோவை காந்திபுரத்தில் இருந்து பூண்டி மலைக்குச் சென்ற அரசு பேருந்து ஒன்று, பூண்டி அருகே சென்ற போது சாலையில் பேருந்தை நோக்கி எதிரே பெரிய தந்தங்களுடன் காட்டு யானை ஒன்று கம்பீரமாக நடந்து வந்துள்ளது.
கோவை: கோடை காலத்தில் தண்ணீர் தேடி வரும் காட்டு யானைகள் வழக்கமாக கோவை பூண்டி மலைப்பகுதிக்கு செல்லும் சாலைகளை கடந்து செல்லும். இதனால், கோடை காலம் துவங்கியவுடன் வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை விதித்தது.
இருப்பினும், உள்ளூர் பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் மலையேற அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கோவை காந்திபுரத்தில் இருந்து பூண்டி மலைக்குச் சென்ற அரசு பேருந்து ஒன்று, பூண்டி அருகே சென்ற போது சாலையில் பேருந்தை நோக்கி எதிரே பெரிய தந்தங்களுடன் காட்டு யானை ஒன்று கம்பீரமாக நடந்து வந்துள்ளது.
இதையடுத்து பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் வாகனத்தை பின்னால் எடுத்துள்ளார். அந்த காட்டு யானை கம்பீரமாக நடந்துச் செல்லும் காட்சியை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் படம் பிடித்துள்ளார். இதனால், பூண்டி வெள்ளிங்கிரி கோவிலுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த விடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இருப்பினும், உள்ளூர் பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் மலையேற அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கோவை காந்திபுரத்தில் இருந்து பூண்டி மலைக்குச் சென்ற அரசு பேருந்து ஒன்று, பூண்டி அருகே சென்ற போது சாலையில் பேருந்தை நோக்கி எதிரே பெரிய தந்தங்களுடன் காட்டு யானை ஒன்று கம்பீரமாக நடந்து வந்துள்ளது.
இதையடுத்து பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் வாகனத்தை பின்னால் எடுத்துள்ளார். அந்த காட்டு யானை கம்பீரமாக நடந்துச் செல்லும் காட்சியை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் படம் பிடித்துள்ளார். இதனால், பூண்டி வெள்ளிங்கிரி கோவிலுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த விடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.