கோவை பூண்டி மலைக்கு செல்லும் சாலையில் கம்பீரமாக நடந்து வந்த காட்டு யானை…!

கோவை காந்திபுரத்தில் இருந்து பூண்டி மலைக்குச் சென்ற அரசு பேருந்து ஒன்று, பூண்டி அருகே சென்ற போது சாலையில் பேருந்தை நோக்கி எதிரே பெரிய தந்தங்களுடன் காட்டு யானை ஒன்று கம்பீரமாக நடந்து வந்துள்ளது.


கோவை: கோடை காலத்தில் தண்ணீர் தேடி வரும் காட்டு யானைகள் வழக்கமாக கோவை பூண்டி மலைப்பகுதிக்கு செல்லும் சாலைகளை கடந்து செல்லும். இதனால், கோடை காலம் துவங்கியவுடன் வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை விதித்தது.

இருப்பினும், உள்ளூர் பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் மலையேற அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கோவை காந்திபுரத்தில் இருந்து பூண்டி மலைக்குச் சென்ற அரசு பேருந்து ஒன்று, பூண்டி அருகே சென்ற போது சாலையில் பேருந்தை நோக்கி எதிரே பெரிய தந்தங்களுடன் காட்டு யானை ஒன்று கம்பீரமாக நடந்து வந்துள்ளது.

இதையடுத்து பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் வாகனத்தை பின்னால் எடுத்துள்ளார். அந்த காட்டு யானை கம்பீரமாக நடந்துச் செல்லும் காட்சியை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் படம் பிடித்துள்ளார். இதனால், பூண்டி வெள்ளிங்கிரி கோவிலுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்லவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த விடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...