கோவை பொள்ளாச்சியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் துவக்கம்..!

பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் 28-அணிகள் பங்கேற்கின்றன.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் துவங்கியது.

பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று முதல் பொள்ளாச்சி யங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பில் 9 ஆண்டு, மற்றும் ராஜ்குமார் M.S.மணி ஆகியோரின் 2ஆம் ஆண்டு நினைவு கோப்பை யாகவும், மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்கியது.



நாக்-அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டிகளில், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 28 அணிகள் பங்கேற்கின்றன. இன்று தொடங்கிய முதல் போட்டியில் சக்தி கிரிக்கெட் அகாடமி அணியும்,பி.வை.சி.சி. அணியும் மோதின.

டாஸ் வென்ற சக்தி கிரிக்கெட் அகாடமி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 201 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக நாச்சி குமார் 88 ரன்களும், ஸ்ரீ நிரஞ்சன் 40 ரன்களும் எடுத்தனர்.

202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பி.வை.சி.சி. அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ரன் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக குணா 26 ரன்களை எடுத்தார். இதையடுத்து 141 ரன்கள் வித்தியாசத்தில் சக்தி கிரிகெட் அகடமி அணி வெற்றி பெற்றது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...