பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் 28-அணிகள் பங்கேற்கின்றன.
கோவை: பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் துவங்கியது.
பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று முதல் பொள்ளாச்சி யங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பில் 9 ஆண்டு, மற்றும் ராஜ்குமார் M.S.மணி ஆகியோரின் 2ஆம் ஆண்டு நினைவு கோப்பை யாகவும், மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்கியது.

நாக்-அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டிகளில், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 28 அணிகள் பங்கேற்கின்றன. இன்று தொடங்கிய முதல் போட்டியில் சக்தி கிரிக்கெட் அகாடமி அணியும்,பி.வை.சி.சி. அணியும் மோதின.
டாஸ் வென்ற சக்தி கிரிக்கெட் அகாடமி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 201 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக நாச்சி குமார் 88 ரன்களும், ஸ்ரீ நிரஞ்சன் 40 ரன்களும் எடுத்தனர்.
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பி.வை.சி.சி. அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ரன் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக குணா 26 ரன்களை எடுத்தார். இதையடுத்து 141 ரன்கள் வித்தியாசத்தில் சக்தி கிரிகெட் அகடமி அணி வெற்றி பெற்றது.

பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று முதல் பொள்ளாச்சி யங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பில் 9 ஆண்டு, மற்றும் ராஜ்குமார் M.S.மணி ஆகியோரின் 2ஆம் ஆண்டு நினைவு கோப்பை யாகவும், மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்கியது.
நாக்-அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டிகளில், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கோவை, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 28 அணிகள் பங்கேற்கின்றன. இன்று தொடங்கிய முதல் போட்டியில் சக்தி கிரிக்கெட் அகாடமி அணியும்,பி.வை.சி.சி. அணியும் மோதின.
டாஸ் வென்ற சக்தி கிரிக்கெட் அகாடமி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 201 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக நாச்சி குமார் 88 ரன்களும், ஸ்ரீ நிரஞ்சன் 40 ரன்களும் எடுத்தனர்.
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பி.வை.சி.சி. அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ரன் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக குணா 26 ரன்களை எடுத்தார். இதையடுத்து 141 ரன்கள் வித்தியாசத்தில் சக்தி கிரிகெட் அகடமி அணி வெற்றி பெற்றது.