தமிழகம் முழுவதும் 1,000 குறு, சிறு ஸ்பின்னிங் மில்கள் தற்காலிகமாக மூடப்படும்: 'SISPA' அவசரக் கூட்டத்தில் முடிவு!

பருத்தி விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், சிறு, குறு ஸ்பின்னிங் மில்கள் செயல்பட முடியாத நிலையில் மில்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்படும் என்று சிறு குறு ஸ்பின்னிங் மில் அதிபர்கள் சங்க அவசர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: பருத்தி விலை வரலாறு காணாத விலை உயர்வு சந்தித்து வருகிறது. 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி பஞ்சு விலை இன்று ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள குறு, சிறு பிரிவை சேர்ந்த ஸ்பின்னிங் மில்கள் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே பஞ்சு வாங்குவதை நிறுத்துவது என்றும், இருக்கும் பஞ்சு தீர்ந்தவுடன் மில்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடுவது என்று கோவையில் இன்று மாலை நடைபெற்ற சிறு குறு ஸ்பின்னிங் மில் அதிபர்கள் சங்க அவசர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் 'SISPA' கௌரவ செயலாளர், ஜெகதீசன் கூறியதாவது: பஞ்சு விலை தொடர்ந்து வரலாறு காணாத அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. மத்திய அரசு இறக்குமதி வரியை முற்றிலும் நீக்கி உள்ளது. இருப்பினும் வெளிநாடுகளில் புக்கிங் செய்யப்பட்ட பஞ்சு, இந்தியா வருவதற்கு இரண்டு மாதங்கள் ஆகும். இன்று 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி பஞ்சு விலை ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வு குறு, சிறு ஸ்பின்னிங் மில் நிர்வாகத்தால் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே எங்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று மாலை கோவையில் நடந்தது. தற்போது உள்ள நெருக்கடியான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து குறு, சிறு ஸ்பின்னிங் மில்களும் பஞ்சு வாங்குவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் 1,000 ஸ்பின்னிங் மில்கள் குறு, சிறு பிரிவைச் சேர்ந்தவை. எனவே அவை அனைத்தும் தற்காலிகமாக மூட ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...