திருவொற்றியூரில் இருந்து கோவை வந்த மருத்துவ மாணவி பத்திரமாக தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.
கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் காட்டூர் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு ஒரு இளம்பெண் சந்தேகத்திற்கிடமாக அங்குமிங்கும் சுற்றிக்கொண்டு இருந்தார். இதனை பார்த்த போலீசார் அந்த இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளம்பெண் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வந்ததாக தெரிவித்தார். இதில் அதிர்ச்சி அடைந்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த மாணவி திருவொற்றியூர்சேர்ந்த 18 வயது மாணவி என்பதும், சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தந்தை கோவை வந்துள்ளார். பின்னர் மாணவிக்கு அறிவுரை வழங்கி தந்தையிடம் போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர்.
அப்போது அங்கு ஒரு இளம்பெண் சந்தேகத்திற்கிடமாக அங்குமிங்கும் சுற்றிக்கொண்டு இருந்தார். இதனை பார்த்த போலீசார் அந்த இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளம்பெண் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வந்ததாக தெரிவித்தார். இதில் அதிர்ச்சி அடைந்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த மாணவி திருவொற்றியூர்சேர்ந்த 18 வயது மாணவி என்பதும், சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தந்தை கோவை வந்துள்ளார். பின்னர் மாணவிக்கு அறிவுரை வழங்கி தந்தையிடம் போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர்.