கோவையில் முதலமைச்சர்‌ தலைமையில் தொழில்‌ முனைவோர்‌ உடனான சிறப்பு கலந்துரையாடல்‌ கூட்டம்: ITF-வரவேற்பு..!

முதல்வர்‌ உற்பத்தித்துறைக்கு உரிய கவனமும்‌, முக்கியத்துவமும்‌ தொடர்ந்து தரப்படும்‌ என்று உறுதி அளித்துள்ளதாக இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ITF) தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் முதலமைச்சர்‌ தலைமையில்‌ நடைபெற்ற தொழில்‌ முனைவோர்‌ உடனான சிறப்பு கலந்துரையாடல்‌ கூட்டம் நடைப்பெற்றது.

இதுகுறித்து இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ITF) ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறியுள்ளதாவது:-

முதலமைச்சர்‌ தலைமையில்‌ நடைபெற்ற தொழில்‌ முனைவோர்‌ உடனான சிறப்பு கலந்துரையாடல்‌ கூட்டம்‌ மிகவும்‌ வரவேற்கத்தக்க முயற்சி ஆகும்‌ இந்த கூட்டம்‌, தமிழக ஜவுளித்‌ துறையின்‌ வாய்ப்புகள்‌ மற்றும்‌ சவால்கள்‌ பற்றிய விளக்கங்களை கூற வாய்ப்பாக அமைந்தது.

சைனா பிளஸ்‌1 என்ற கொள்கையின்‌ அடிப்படையில்‌ வரும்‌ ஏற்றுமதி ஆர்டர்களை கையாளும்‌ வகையில்‌, SME நிறுவனங்களுக்கு TN State PLI Scheme for Textile & Apparel sector (உற்பத்தி சார்ந்த சலுகைத்‌ திட்டம்‌) திட்டத்தை செயல்படுத்த பரிசீலிக்கும்‌ படி கேட்டுக்‌ கொண்டோம்‌.

இந்தத்‌ திட்டம்‌ செயல்படுத்தப்பட்டால்‌ தமிழக சிறு மற்றும்‌ நடுத்தர ஜவுளி நிறுவனங்கள்‌ புது முதலீடுகளை செய்து தங்களது போட்டித்‌ திறனை அதிகரிக்க முடியும்‌. அரசு செலவிடும்‌ சலுகை தொகைக்கான உடனடி பலன்‌ வரி வருவாய்‌, புது வேலை வாய்ப்புகள்‌ மற்றும்‌ ஏற்றுமதி உயர்வு மூலம்‌ கிடைக்கும்‌.

மேலும்‌ திட்ட சலுகை காலம்‌ முடிந்த பின்னரும்‌, இந்த உற்பத்தி கட்டமைப்புகள்‌ பல ஆண்டுகளுக்கு உற்பத்தியையும்‌, வேலை வாய்ப்பையும்‌ வழங்கும்‌. இந்தத்‌ திட்டம்‌ பற்றி விரிவான அறிக்கைகளை ITF அமைப்பு சார்பில்‌ அளிக்க அனுமதிக்கும் படி கேட்டுக்‌ கொண்டோம்‌.

இந்த மாநில PLI திட்டம்‌ மூலம்‌ புதிதாக ரூபாய்‌ 15000 கோடி ஏற்றுமதியையும்‌ 3 லட்சம்‌ வேலை வாய்ப்புகளையும்‌ அடுத்த 5 ஆண்டுகளில்‌ உருவாக்கவும்‌ வாய்ப்பு உள்ளது.

தமிழக அரசு பல்வேறு உற்பத்துத்துறை சார்ந்த ஊக்கத்‌ திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டமும்‌ செயல்படுத்தபட்டால்‌, அது ஒரு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும்‌.

முதல்வர்‌ உற்பத்தித்துறைக்கு உரிய கவனமும்‌, முக்கியத்துவமும்‌ தொடர்ந்து தரப்படும்‌ என்று உறுதி அளித்ததோடு, நிறுவனங்கள்‌ மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்துவதில்‌ கவனம்‌ செலுத்த வேண்டும்‌ என்று வலியுறுத்தினார்‌.

இவ்வாறு இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ITF) ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறியுள்ளார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...