சீரநாயக்கன்பாளையம் மற்றும் ஒண்டிப்புதூர், நாய்கள் அறுவை சிகிச்சை அரங்கத்தில் வீடற்ற நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகிறது.
கோவை: மாநகராட்சி பகுதியில் வீடற்ற நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் சீரநாயக்கன்பாளையம் மற்றும் ஒண்டிப்புதூர், நாய்கள் அறுவை சிகிச்சை அரங்கத்தில் வீடற்ற நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகிறது.
இந்நடவடிக்கைகளை துரிதப்படுத்த கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் வீடற்ற நாய்களின் எண்ணிக்கையை தனியார் நிறுவனத்தின் மூலம் 20 முதல் 25 தன்னார்வலர்கள் உதவியுடன் தகுந்த நெறிமுறைகளை பின்பற்றி புள்ளி விவரங்களுடன் நாளை முதல் கணக்கெடுக்கப்பட உள்ளது.
கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பு ஊசி மற்றும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.