தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மேய்ந்து கொண்டு நடந்து வந்த சினைமாடு, அங்கு சாலை ஓரத்தில் இருந்த சுமார் 10 அடி ஆழமுள்ள பள்ளத்திற்குள் தவறி விழுந்தது.
கோவை: கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு சொந்தமான சினைமாடு ஒன்று, நேற்று மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்டுள்ளார். அப்போது, தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மேய்ந்து கொண்டு நடந்து வந்த சினைமாடு, அங்கு சாலை ஓரத்தில் இருந்த சுமார் 10 அடி ஆழமுள்ள பள்ளத்திற்குள் தவறி விழுந்தது.
இதில், காலில் காயத்துடன் சிக்கிய மாடு வலியில் சத்தமிட்டது. அப்போது,அங்கிருந்த பொதுமக்கள் பள்ளத்தில் எட்டிப்பார்த்த போது, சினைமாடு பள்ளத்திற்குள் விழுந்தது தெரியவந்தது. பின்னர், அந்த மட்டை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பள்ளத்தில் இறங்கி கயிறு மூலம், மாட்டின் தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலமாக கட்டி, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர். பள்ளத்தில் விழுந்ததால் பதற்றத்தில் இருந்த மாட்டுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்கப்பட்டு, மாட்டுக்கு தேவைப்படும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள்மேற்கொண்டனர்.
இதில், காலில் காயத்துடன் சிக்கிய மாடு வலியில் சத்தமிட்டது. அப்போது,அங்கிருந்த பொதுமக்கள் பள்ளத்தில் எட்டிப்பார்த்த போது, சினைமாடு பள்ளத்திற்குள் விழுந்தது தெரியவந்தது. பின்னர், அந்த மட்டை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பள்ளத்தில் இறங்கி கயிறு மூலம், மாட்டின் தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலமாக கட்டி, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர். பள்ளத்தில் விழுந்ததால் பதற்றத்தில் இருந்த மாட்டுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்கப்பட்டு, மாட்டுக்கு தேவைப்படும் சிகிச்சைக்கான ஏற்பாடுகள்மேற்கொண்டனர்.