மேம்பாலங்கள் திறக்க சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் என்ற அமைப்பு சார்பில் முதல்வருக்கு கோரிக்கை!

கோவையில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரையில் திறக்கப்படாமல் இருக்கும் மேம்பாலங்களை திறக்க சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் என்ற அமைப்பு சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் திறக்கப்படாமல் இருக்கும் மேம்பாலங்களை திறக்க வலியுறுத்தி சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் என்ற அமைப்பு சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர்களது கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று முதலாம்‌ ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, கோவை மாநகர மக்களின்‌ சார்பில்‌ மாண்புமிகு முதலமைச்சருக்கு நல்வாழ்த்துக்கள்‌. பல ஆண்டுகளாக நிலுவையில்‌ உள்ள பல பிரச்சனைகள்‌ உங்கள்‌ அரசாங்கத்தால்‌ தீர்வு காணப்பட்டுள்ளது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும்‌ குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ ரேஷன் கார்டு வழங்குவதற்கான சிறப்பு முகாம்‌ நடத்தப்படுவது அருமையான திட்டமாகும்‌.

அதேசமயம்‌, கோவை மாநகர மக்களுக்கு கவலையளிக்கும்‌ நீண்ட நாள்‌ ஆவலாக உள்ளது. கவுண்டம்பாளையம்‌, ராமநாதபுரம்‌, உக்கடம்‌ ஆகிய இடங்களில்‌ உள்ள மேம்பாலங்கள்‌ பணி நிறைவு பெற்றும்‌ திறப்பதில்‌ தாமதம்‌ ஏற்படுவதும்‌ ஒரு பிரச்சனை. கட்டி முடிக்கப்பட்டு மாதங்கள்‌ ஆகியும்‌ இதுவரை போக்குவரத்திற்கு திறக்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கும்‌ மேலாக கட்டுமான பணியின்‌ போது மக்கள்‌ சொல்லில்லடங்கா சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்‌.

சமீப காலங்களில்‌ முதல்வரால் தலைமைச்செயலகத்தில்‌ இருந்து காணொளி வாயிலாக பல முக்கிய திட்டங்கள்‌ தொடங்கி வைக்கப்படுகின்றன. இந்த மேம்பாலங்களை விரைவில்‌ திறப்பது, பொதுமக்களுக்கு மேலும்‌ சிரமத்தைத் தடுக்கும்‌ மற்றும்‌ அரசாங்கத்தின்‌ நன்மதிப்பை அதிகரிக்கும்‌. ஐயா, இனியும்‌ தாமதிக்காமல்‌ இந்த பாலங்களைத்‌ திறக்குமாறு தாழ்மையுடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌. பாலங்கள்‌ திறப்பு விழாவை நினைவு கூறும்‌ வகையில்‌ ஒரு முறையான திறப்பு விழா பொருத்தமானதாகக் கருதப்பட்டால்‌ உங்கள்‌ வசதிக்கேற்ப பின்னர்‌ நடத்தலாம்‌. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...