கோவையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல் - இளைஞர் மீது வழக்கு பதிவு!

கோவையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை தாக்கிய இளைஞர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் இளைஞர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகள் வெங்கடலட்சுமி (19). இவர் பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோவை விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (22) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் காதலிக்க தொடங்கி உள்ளனர். இந்நிலையில் வெங்கடலட்சுமி, பாலமுருகன் உடனான காதலை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாலமுருகன் பலமுறை வெங்கடலட்சுமியை தொடர்பு கொள்ள முயன்று அவர் சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து வெளியே வந்த வெங்கடலட்சுமியை, பாலமுருகன் வழிமறித்து உள்ளார். தொடர்ந்து தன்னை திருமணம் செய்யுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் பாலமுருகன் வெங்கடலட்சுமியை சரமாரியாக தாக்க துவங்கினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர். பின்னர் இதுகுறித்து வெங்கடலட்சுமி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் பாலமுருகன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...