கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் விற்பனை கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் விற்பனை கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உள்ளே இருந்த பொருட்கள்தீயில் கருகி நாசமானது.
கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. புகை மூட்டத்தைப் பார்த்தஅங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, கோவைப்புதூர் மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிளான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.