ஆலாந்துறை அருகே வந்த போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாடிவயல் பகுதியில் இருந்து காந்திபுரம் நோக்கி வந்த கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது.
கோவை: கோவை செம்மேடு பகுதியை சேர்ந்தவர் அசோக் (26). தொழிலாளி. இவர் தனது நண்பரான, ஆலந்துறையை சேர்ந்த சபரி கணேஷ் (29) என்பவருடன் சிறுவாணி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஆலாந்துறை அருகே வந்த போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாடிவயல் பகுதியில் இருந்து காந்திபுரம் நோக்கி வந்த கொண்டிருந்த (59 எண்) அரசு பேருந்து மீது மோதியது.

விபத்தில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த சபரி கணேஷ் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆலாந்துறை போலீசார் அசோக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது, ஆலாந்துறை அருகே வந்த போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாடிவயல் பகுதியில் இருந்து காந்திபுரம் நோக்கி வந்த கொண்டிருந்த (59 எண்) அரசு பேருந்து மீது மோதியது.
விபத்தில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த சபரி கணேஷ் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆலாந்துறை போலீசார் அசோக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.