கோவை ஆலந்துறை அருகே அரசு பேருந்து - இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து; இளைஞர் பலி…!

ஆலாந்துறை அருகே வந்த போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாடிவயல் பகுதியில் இருந்து காந்திபுரம் நோக்கி வந்த கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது.


கோவை: கோவை செம்மேடு பகுதியை சேர்ந்தவர் அசோக் (26). தொழிலாளி. இவர் தனது நண்பரான, ஆலந்துறையை சேர்ந்த சபரி கணேஷ் (29) என்பவருடன் சிறுவாணி சாலையில் சென்று கொண்டிருந்தார்.



அப்போது, ஆலாந்துறை அருகே வந்த போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாடிவயல் பகுதியில் இருந்து காந்திபுரம் நோக்கி வந்த கொண்டிருந்த (59 எண்) அரசு பேருந்து மீது மோதியது.



விபத்தில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த சபரி கணேஷ் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த ஆலாந்துறை போலீசார் அசோக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...