பல்லடம் அருகே கியான்வாபி மசூதியின் ஒரு பகுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்ட வாரணாசி நீதிமன்ற உத்தரவைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: உத்தர பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ள பழமையான கியான்வாபி மசூதியில் ஒரு பகுதியில் சிவலிங்கம் இருப்பதாகவும், மசூதியில் கள ஆய்வு செய்ய கோரியும் வாரணாசி நீதிமன்றத்தில் இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ஒருவரின் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு வாரணாசி நீதிமன்றம் கியான்வாபி மசூதியின் ஒரு பகுதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டது.
இதன் மூலம் வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-ஐ மீறும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும், மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு துணை போகாமல் சட்டத்தின் ஆட்சியை ஒன்றிய, மாநில அரசுகள் நிலைநிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹாரிஸ் பாபு தலைமையில் பல்லடத்தை அடுத்த மங்கலம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் மூலம் வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-ஐ மீறும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும், மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு துணை போகாமல் சட்டத்தின் ஆட்சியை ஒன்றிய, மாநில அரசுகள் நிலைநிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹாரிஸ் பாபு தலைமையில் பல்லடத்தை அடுத்த மங்கலம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.