போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை பேரூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதியரின் 4-ஆம் வகுப்பு படிக்கும் 9-வயது மகள் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்த போது ஒரு இளைஞர் வீட்டுக்கு வந்து குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார்.
அந்த சிறுமி எடுத்துக் கொடுத்தார். அப்போது அந்த இளைஞர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் சிறுமி கூச்சலிட்டதும், அக்கம் பக்கத்தினர் திரண்டதையடுத்து, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பின்னர், அன்று மாலையே அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு தம்பதியரின் 5-வயது மகளுக்கும் இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதே போல் சிறுமி கூச்சல் போட்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது தொடர்பாக இரு சிறுமிகளின் பெற்றோரும் பேரூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவர் ஒரே நபர் என்பதும், அவர் தொண்டாமுத்தூரில் உள்ள வஞ்சியம்மன் நகரைச் சேர்ந்த நஜிமுல் இஸ்லாம்(23) எனத் தெரிய வந்தது.
இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்த நிலையில் வீட்டருகே பதுங்கியிருந்த நஜிமுல் இஸ்லாமை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதியரின் 4-ஆம் வகுப்பு படிக்கும் 9-வயது மகள் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்த போது ஒரு இளைஞர் வீட்டுக்கு வந்து குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார்.
அந்த சிறுமி எடுத்துக் கொடுத்தார். அப்போது அந்த இளைஞர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் சிறுமி கூச்சலிட்டதும், அக்கம் பக்கத்தினர் திரண்டதையடுத்து, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பின்னர், அன்று மாலையே அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு தம்பதியரின் 5-வயது மகளுக்கும் இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதே போல் சிறுமி கூச்சல் போட்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது தொடர்பாக இரு சிறுமிகளின் பெற்றோரும் பேரூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவர் ஒரே நபர் என்பதும், அவர் தொண்டாமுத்தூரில் உள்ள வஞ்சியம்மன் நகரைச் சேர்ந்த நஜிமுல் இஸ்லாம்(23) எனத் தெரிய வந்தது.
இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்த நிலையில் வீட்டருகே பதுங்கியிருந்த நஜிமுல் இஸ்லாமை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.