கோவையில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது..!

போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை பேரூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கோவை மாவட்ட காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதியரின் 4-ஆம் வகுப்பு படிக்கும் 9-வயது மகள் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்த போது ஒரு இளைஞர் வீட்டுக்கு வந்து குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார்.

அந்த சிறுமி எடுத்துக் கொடுத்தார். அப்போது அந்த இளைஞர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் சிறுமி கூச்சலிட்டதும், அக்கம் பக்கத்தினர் திரண்டதையடுத்து, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

பின்னர், அன்று மாலையே அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு தம்பதியரின் 5-வயது மகளுக்கும் இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதே போல் சிறுமி கூச்சல் போட்டதும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இது தொடர்பாக இரு சிறுமிகளின் பெற்றோரும் பேரூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தவர் ஒரே நபர் என்பதும், அவர் தொண்டாமுத்தூரில் உள்ள வஞ்சியம்மன் நகரைச் சேர்ந்த நஜிமுல் இஸ்லாம்(23) எனத் தெரிய வந்தது.

இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்த நிலையில் வீட்டருகே பதுங்கியிருந்த நஜிமுல் இஸ்லாமை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...