கோவையில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி: 4-பேர் ஒரே இரு சக்கர வாகனத்தில் முந்தி செல்ல முயன்ற போது விபரீதம்…!

இதில், படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மூவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.


கோவை: கோவையில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன் (21). இவர் கோவை அன்டக்காபாளையம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், மணிகண்டன் நேற்று இரவு தனது நண்பர்களான ராகவன் (24), கவியரசு (20), கவுதன் (24) ஆகிய மூன்று பேரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு, 4-பேரும் ஒரே வாகனத்தில் வெள்ளானப்பட்டி - காளப்பட்டி சாலையில், காளப்பட்டி சந்தைக்கு சென்றுள்ளனர்.

அப்போது செக்கான் தோட்டம் அருகே சென்ற போது முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிரே கார் வந்ததால் நிலைதடுமாறி, இடது சென்ற லாரியின் மீது மோதி சாலையில் விழுந்தனர்.



இதில், படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மூவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து, அங்கு வந்த கோவில்பாளையம் போலீசார் மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...