இதில், படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மூவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
கோவை: கோவையில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன் (21). இவர் கோவை அன்டக்காபாளையம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், மணிகண்டன் நேற்று இரவு தனது நண்பர்களான ராகவன் (24), கவியரசு (20), கவுதன் (24) ஆகிய மூன்று பேரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு, 4-பேரும் ஒரே வாகனத்தில் வெள்ளானப்பட்டி - காளப்பட்டி சாலையில், காளப்பட்டி சந்தைக்கு சென்றுள்ளனர்.
அப்போது செக்கான் தோட்டம் அருகே சென்ற போது முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிரே கார் வந்ததால் நிலைதடுமாறி, இடது சென்ற லாரியின் மீது மோதி சாலையில் விழுந்தனர்.

இதில், படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மூவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து, அங்கு வந்த கோவில்பாளையம் போலீசார் மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன் (21). இவர் கோவை அன்டக்காபாளையம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், மணிகண்டன் நேற்று இரவு தனது நண்பர்களான ராகவன் (24), கவியரசு (20), கவுதன் (24) ஆகிய மூன்று பேரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு, 4-பேரும் ஒரே வாகனத்தில் வெள்ளானப்பட்டி - காளப்பட்டி சாலையில், காளப்பட்டி சந்தைக்கு சென்றுள்ளனர்.
அப்போது செக்கான் தோட்டம் அருகே சென்ற போது முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிரே கார் வந்ததால் நிலைதடுமாறி, இடது சென்ற லாரியின் மீது மோதி சாலையில் விழுந்தனர்.
இதில், படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மூவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து, அங்கு வந்த கோவில்பாளையம் போலீசார் மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.