வீட்டை அபகரிக்க முயற்சி செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
திருப்பூர்: தொங்குட்டிபாளையம் அருகே வீட்டை அபகரிக்க முயற்சி செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள தொங்குட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா. இவரது கணவர் ஆனந்தகுமார். தொங்குட்டிபாளையம் ஏழாவது வார்டு உறுப்பினராக கார்த்திகா உள்ளார்.
இந்நிலையில், தொங்குட்டிபாளையம் பகுதியில் 8 சென்ட் நிலம் மற்றும் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருவதாகவும், அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மனோகரன், வெள்ளியங்கிரி ஆகியோர் எங்களது வீடு மற்றும் நிலத்தைப் போலியான ஆவணம் தயாரித்து அபகரிக்க முயற்சி செய்து வருவதாகவும், காலியாக உள்ள நிலத்தையும் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
தற்போது எங்களை வீட்டை காலி செய்ய வற்புறுத்தி மிரட்டி வருவதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி போலியாக அவர்கள் தயாரித்துள்ள ஆவணங்களையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென மன்னனை ஊற்றி குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றனர்.

உடனடியாக பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள தொங்குட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா. இவரது கணவர் ஆனந்தகுமார். தொங்குட்டிபாளையம் ஏழாவது வார்டு உறுப்பினராக கார்த்திகா உள்ளார்.
இந்நிலையில், தொங்குட்டிபாளையம் பகுதியில் 8 சென்ட் நிலம் மற்றும் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருவதாகவும், அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மனோகரன், வெள்ளியங்கிரி ஆகியோர் எங்களது வீடு மற்றும் நிலத்தைப் போலியான ஆவணம் தயாரித்து அபகரிக்க முயற்சி செய்து வருவதாகவும், காலியாக உள்ள நிலத்தையும் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
தற்போது எங்களை வீட்டை காலி செய்ய வற்புறுத்தி மிரட்டி வருவதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி போலியாக அவர்கள் தயாரித்துள்ள ஆவணங்களையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென மன்னனை ஊற்றி குடும்பத்துடன் தற்கொலை செய்ய முயன்றனர்.
உடனடியாக பாதுகாப்பு பணியிலிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.