படுகாயமடைந்த, திருநங்கை தர்ஷா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரை கத்தியால் குத்திய மேகநாதன் மற்றும் பூவரசன் ஆகிய இருவரையும் சிங்காநல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: கோவை சூலூர் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்ஷா (33). திருநங்கையான, இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் சேர்ந்துநெசவாளர் காலனியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று அங்கிருந்த பாரில் மது கேட்டுள்ளார்.
அப்போது, பாரில் வேலை செய்து கொண்டிருந்த பூவரசன் மற்றும் மேகநாதன் ஆகிய 2 பேர் மதுபாட்டில் கொடுக்க முடியாது என தெரிவித்ததால், இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு தர்ஷா மற்றும் நண்பர்கள் திருச்சி சாலை ஒண்டிப்புதூரில் உள்ள தனியார் திரையரங்கு அருகே வந்தபோது, மேகநாதன் மற்றும் பூவரசன் இருவரும் தர்ஷாவிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆத்திரமடைந்த பூவரசன் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து, தர்ஷாவின் கழுத்து, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்நிலையில், படுகாயமடைந்த தர்ஷா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில், பூவரசன் மற்றும் மேகநாதன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அப்போது, பாரில் வேலை செய்து கொண்டிருந்த பூவரசன் மற்றும் மேகநாதன் ஆகிய 2 பேர் மதுபாட்டில் கொடுக்க முடியாது என தெரிவித்ததால், இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு தர்ஷா மற்றும் நண்பர்கள் திருச்சி சாலை ஒண்டிப்புதூரில் உள்ள தனியார் திரையரங்கு அருகே வந்தபோது, மேகநாதன் மற்றும் பூவரசன் இருவரும் தர்ஷாவிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆத்திரமடைந்த பூவரசன் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து, தர்ஷாவின் கழுத்து, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்நிலையில், படுகாயமடைந்த தர்ஷா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில், பூவரசன் மற்றும் மேகநாதன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.