தமிழகத்தில் கைவரிசை காட்டிய கர்நாடக திருட்டு கும்பல் - மடக்கி பிடித்த கோவை தனிப்படை போலீஸ்….!

விசாரணையில், இந்த கும்பல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடும்பம் குடும்பமாக விடுதிகளில் தங்கி மக்கள் நடமாட்டம் மற்றும் பணப் புழக்கம் அதிகம் உள்ள பகுதிகளை குறிவைத்து, பணத்தை எடுத்து வருபவரின் கவனத்தை திசைதிருப்பி திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.


கோவை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குடும்பத்துடன் தங்கி பல லட்சம் திருடிய கர்நாடகா திருட்டு கும்பலை கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த எட்வின் ஜோசப் என்பவர் கடந்த 26ஆம் தேதி, தன்னுடைய காரில் சென்றபோது வழிமறித்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், எட்வின் ஜோசப்பின் தனது வாகனம் பஞ்சர் ஆனதாக கூறியுள்ளார்.

இதை நம்பி கார் ஓட்டுநர் மற்றும் எட்வின் ஜோசப் இருவரும் கீழே இறங்கிய நேரத்தில், அங்கு காத்திருந்த மற்றொரு மூன்று மர்ம நபர்களுடன் சேர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் இருந்த ரூ.6.90 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர்.

இதுதொடர்பாக, அவர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் கர்நாடகா விரைந்து சென்ற தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது ஸ்ரீனிவாஸ், சங்கர், அஜய் பாபு, நந்து ஆகிய நான்கு பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



அப்போது, ஓசூர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த அந்த 4 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து ரூ 14 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.



இதையடுத்து, அவர்களை கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது, கடந்த 22ஆம் தேதி காரமடையில் சிகரெட் வியாபாரியிடம் ரூ.1.52 லட்சம், மேட்டுப்பாளையம் பாரி கம்பெனி சாலையைச் சேர்ந்த அயூப்கான் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்ட ரூ.1.43 லட்சம், அதேபோல் பொள்ளாச்சி சாலையில் தனியார் உணவகம் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து ரூ.2.96 லட்சம் மேலும் ஆத்தூரில் பெண் ஒரு,வர் மீது அரிப்பு பொடியை தூவி அவரிடம் இருந்த ரூ.1.20 லட்சம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றது இவர்கள் தான் என்பதும் தெரியவந்தது.

மேலும், தொடர் விசாரணையில் இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடும்பம் குடும்பமாக விடுதிகளில் தங்கி மக்கள் நடமாட்டம் மற்றும் பணப் புழக்கம் அதிகம் உள்ள மார்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து, பணத்தை எடுத்து வருபவரின் கவனத்தை திசைதிருப்பி திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

புகார் அளித்து 10 நாட்களுக்குள் துரிதமாக செயல்பட்டு கர்நாடக திருட்டு கும்பலை பிடித்த தனிப்படை போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...