கோவை வெள்ளலூர் அருகே நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட லாரியில் தீ விபத்து…!

தெற்கு தீயணைப்புத் துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் 20 நிமிடம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், நீண்ட ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி உரிமையாளர் யார் என்பது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை.


கோவை: கோவை வெள்ளலூர் அருகே நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட லாரி திடிரென தீ பிடித்து எரிந்ததால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று மாலை கோவை வெள்ளலூர் எல்.ஜி நகர் பகுதியில் உள்ள காலியிடத்தில் நீண்ட ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் திடீரென தீ பிடித்து எரியத் துவங்கியது.



இதையடுத்து, லாரி அருகே கொட்டி வைக்கப்பட்டிருந்த கழிவுப் பஞ்சு மற்றும் மரம் முற்புதர்களிலும் தீ பரவியது, சற்று நேரத்தில், தீ மளமளவென பரவி லாரி முழுவதும் பற்றி எரிய தொடங்கிய நிலையில், அங்கு புகைமண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.



விரைந்து வந்த தெற்கு தீயணைப்புத் துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் 20 நிமிடம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், நீண்ட ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி உரிமையாளர் யார் என்பது குறித்த எந்த தகவலும் இல்லாத நிலையில், சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...