கோவை வெள்ளலூர் அருகே நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட லாரியில் தீ விபத்து…!

தெற்கு தீயணைப்புத் துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் 20 நிமிடம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், நீண்ட ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி உரிமையாளர் யார் என்பது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை.


கோவை: கோவை வெள்ளலூர் அருகே நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட லாரி திடிரென தீ பிடித்து எரிந்ததால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று மாலை கோவை வெள்ளலூர் எல்.ஜி நகர் பகுதியில் உள்ள காலியிடத்தில் நீண்ட ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் திடீரென தீ பிடித்து எரியத் துவங்கியது.



இதையடுத்து, லாரி அருகே கொட்டி வைக்கப்பட்டிருந்த கழிவுப் பஞ்சு மற்றும் மரம் முற்புதர்களிலும் தீ பரவியது, சற்று நேரத்தில், தீ மளமளவென பரவி லாரி முழுவதும் பற்றி எரிய தொடங்கிய நிலையில், அங்கு புகைமண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.



விரைந்து வந்த தெற்கு தீயணைப்புத் துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் 20 நிமிடம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், நீண்ட ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி உரிமையாளர் யார் என்பது குறித்த எந்த தகவலும் இல்லாத நிலையில், சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...