வெள்ளிங்கிரி மலை ஏற்றதுக்கு வனத்துறை தற்போது அனுமதி அளிப்பதாக அறிவித்ததை அடுத்து போராட்டத்துக்கு பதில், நன்றி தெரிவிப்பு கூட்டமாக இதை மாற்றியுள்ளோம் என பேரூர் ஆதீனம் தெரிவித்தார்.
கோவை: கோவை பூண்டி பகுதியில் உள்ள வெள்ளிங்கிரி மலை ஏற, சமீபத்தில் வனத்துறையினர் பக்தர்களுக்கு தடை விதித்தனர். ஆண்டில் சில நடகள் மட்டுமே அனுமதிக்கப்படும் இந்த மலை ஏற்றதுக்கு, தீடீரென தடை விதித்தது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் வெள்ளிங்கிரி மலை பகுதிகளில் அதிக அளவு சுற்றித்திரிவதால், பக்தர்களின் நலன் கருதியேன், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு, அதன்படி, கடந்த மே 1 ஆம் தேதி முதல் வெள்ளிங்கிரி மலையேற அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவுக்கு பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் தலைமையில் தடையை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போவதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், வனத்துறை சார்பில் போடப்பட்டத் தடை திரும்ப பெற்றதால் அறிவிக்கப்பட்ட போராட்டம், நன்றி அறிவிப்பு கூட்டமாக மாற்றப்பட்டது.

இது குறித்து பேசிய பேரூர் ஆதீனம் அடிகளார், "இந்த சூழல் ஏன் ஏற்பட்டது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ஏப்ரல் 30 ஆம் தேதி யாரும் வெள்ளியங்கிரி செல்லக்கூடாது என திடீரென அறிவித்து விட்டார்கள். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டோம், அவர்கள் மூலம் வனத்துறை அமைச்சரை சந்தித்து முதலில் அனுமதி பெற்றோம். இருப்பினும், மீண்டும் மலை ஏற திடீரென நிறுத்தி விட்டார்கள்.
ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செயத்ததன் அடிப்படையில், இங்கு நாம் கூடியுள்ளோம். ஆனால், வனத்துறை தற்போது அனுமதி அளிப்பதாக அறிவித்ததை அடுத்து போராட்டத்துக்கு பதில், நன்றி தெரிவிப்பு கூட்டமாக இதை மாற்றியுள்ளோம்" என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சு.பழனிச்சாமி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் வெள்ளிங்கிரி மலை பகுதிகளில் அதிக அளவு சுற்றித்திரிவதால், பக்தர்களின் நலன் கருதியேன், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு, அதன்படி, கடந்த மே 1 ஆம் தேதி முதல் வெள்ளிங்கிரி மலையேற அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவுக்கு பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் தலைமையில் தடையை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போவதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், வனத்துறை சார்பில் போடப்பட்டத் தடை திரும்ப பெற்றதால் அறிவிக்கப்பட்ட போராட்டம், நன்றி அறிவிப்பு கூட்டமாக மாற்றப்பட்டது.
இது குறித்து பேசிய பேரூர் ஆதீனம் அடிகளார், "இந்த சூழல் ஏன் ஏற்பட்டது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ஏப்ரல் 30 ஆம் தேதி யாரும் வெள்ளியங்கிரி செல்லக்கூடாது என திடீரென அறிவித்து விட்டார்கள். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டோம், அவர்கள் மூலம் வனத்துறை அமைச்சரை சந்தித்து முதலில் அனுமதி பெற்றோம். இருப்பினும், மீண்டும் மலை ஏற திடீரென நிறுத்தி விட்டார்கள்.
ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செயத்ததன் அடிப்படையில், இங்கு நாம் கூடியுள்ளோம். ஆனால், வனத்துறை தற்போது அனுமதி அளிப்பதாக அறிவித்ததை அடுத்து போராட்டத்துக்கு பதில், நன்றி தெரிவிப்பு கூட்டமாக இதை மாற்றியுள்ளோம்" என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சு.பழனிச்சாமி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.