கோவையில்‌ ரூ.978.73 கோடியில்‌ நடைபெற்று வரும்‌ சீர்மிகு நகர திட்டப்‌ பணிகள்: ஒரு நபர்‌ விசாரணை குழு தலைவா்‌ ஆய்வு!

கோவை மாநகராட்சியில்‌ மே 5-6 ஆகிய தேதிகளில்‌ ஒரு நபர்‌ விசாரணை குழு தலைவர்‌ டேவிதார்‌ இ.ஆ.ப. (ஓய்வு), சீர்மிகு நகர திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால்‌ சுங்கரா, முன்னிலையில்‌ ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ சீர்மிகு நகர (Smart City,) திட்டத்தின்‌ கீழ்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ திட்ட பணிகளை 05.05.2022 ம்‌ தேதி (நேற்று) ஒரு நபர்‌ விசாரணை குழுத்‌ தலைவா்‌ டேவிதார்‌.இ.ஆ.ப.(ஓய்வு) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.



அதனை தொடர்ந்து (06.05.2022) இன்றும் சீர்மிகு திட்டத்தின்‌ கீழ்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ பையோ மைனிங்‌ பணி, பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள்‌, குளங்கள்‌ புனரமைத்தல்‌ பணிகள்‌, மாதிரி சாலை, நுண்‌ உரக்கிடங்கு, பல அடுக்கு வாகனம்‌ நிறுத்தும்‌ இடம்‌, ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும்‌ கட்டளை மையம்‌ மற்றும்‌ பல்வேறு திட்ட பணிகளை கள ஆய்வு செய்தார்.

அதனை தொடாந்து, கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்ட அரங்கத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில்‌ செயற்பொறியாளர்கள்‌, உதவி செயற்பொறியாளர்கள்‌, உதவி/இளம்‌ பொறியாளர்கள்‌, கணக்கு அலுவலர்கள்‌, உதவி ஆணையாளா்கள்‌, சீர்மிகு திட்ட அலுவலர்கள்‌ மற்றும்‌ வல்லுநர்கள்‌ ஆகியோருடன்‌ ஆய்வு கூட்டம்‌ நடத்தி நடைபெற்று வரும்‌ பல்வேறு பணிகள்‌ குறித்து ஆலோசனைகள்‌ வழங்கினார்.

முன்னதாக, நேற்று நடந்த ஆய்வில், நுண்‌ உரக்கிடங்குகள்‌, விளையாட்டு மைதான மின்‌ விளக்கு கோபுரங்கள்‌, மாதிரி சாலை, சோலார்‌ மரம்‌, தானியங்கி குடிநீர்‌ மானி, பூங்காக்கள்‌, பாதாள சாக்கடை திட்ட பணிகள்‌, குளங்கள்‌ புனரமைத்தல்‌ பணிகள்‌ மற்றும்‌ 24/7 குடிநீர்‌ பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...