கோவை தடுப்பணையில் விளையாடிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கோவையில் மதுக்கரை குரும்பபாளையம் தடுப்பணையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




கோவை: கோவை மதுக்கரை கடைவீதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி மைதிலி. இவர்களது மகன் சுரேந்திரன் (15), மதுக்கரை அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

கோபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததால், மைதிலி வேறு திருமணம் செய்து கொண்டார். இதனால், மகன் சுரேந்திரன் தாய்மாமன் வீட்டில் வளர்ந்து வந்தான். இந்நிலையில், இன்று மதியம் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான தாணிஸ்வரன் (13), யஸ்வந்த் (13) ஆகியோருடன், மதுக்கரை அடுத்த குரும்பபாளையம் பகுதியில் உள்ள மஞ்சப்பள்ளம் தடுப்பணையில் குளித்து விளையாடச் சென்றுள்ளான்.

அப்போது, சுரேந்திரனுக்கு நீச்சல் தெரியாததால் ஆழமுள்ள பகுதியில் விளையாடிய போது நீரில் மூழ்கியுள்ளான். இதை பார்த்த உடன் சென்ற சிறுவர்கள் சத்தம் போட்டதால், அங்கிருந்தவர்கள் வந்து நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டனர். ஆனால், அதற்குள் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை போலீசார் சிறுவன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...