கோவை தடுப்பணையில் விளையாடிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கோவையில் மதுக்கரை குரும்பபாளையம் தடுப்பணையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




கோவை: கோவை மதுக்கரை கடைவீதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி மைதிலி. இவர்களது மகன் சுரேந்திரன் (15), மதுக்கரை அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

கோபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததால், மைதிலி வேறு திருமணம் செய்து கொண்டார். இதனால், மகன் சுரேந்திரன் தாய்மாமன் வீட்டில் வளர்ந்து வந்தான். இந்நிலையில், இன்று மதியம் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான தாணிஸ்வரன் (13), யஸ்வந்த் (13) ஆகியோருடன், மதுக்கரை அடுத்த குரும்பபாளையம் பகுதியில் உள்ள மஞ்சப்பள்ளம் தடுப்பணையில் குளித்து விளையாடச் சென்றுள்ளான்.

அப்போது, சுரேந்திரனுக்கு நீச்சல் தெரியாததால் ஆழமுள்ள பகுதியில் விளையாடிய போது நீரில் மூழ்கியுள்ளான். இதை பார்த்த உடன் சென்ற சிறுவர்கள் சத்தம் போட்டதால், அங்கிருந்தவர்கள் வந்து நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டனர். ஆனால், அதற்குள் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை போலீசார் சிறுவன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...