கோவை தடாகம் அருகே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானை நுரையீரல் மற்றும் இதயத்தில் ஏற்பட்ட ரத்த கசிவின் காரணமாக நுரையீரல் செயலிழந்து உயிரிழந்துள்ளது என்று பிரேத பரிசோதனை முடிவில் வெளியாகி உள்ளது.
கோவை: நேற்று, கோவை தடாகம் அருகே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானை நுரையீரல் மற்றும் இதயத்தில் ஏற்பட்ட ரத்த கசிவின் காரணமாக நுரையீரல் செயலிழந்து உயிரிழந்துள்ளது என்று பிரேத பரிசோதனை முடிவில் வெளியாகி உள்ளது.

கோவை சின்னதடாகம் பகுதியில் நேற்று 20 வயது பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் வனத்துறையினரால் மீட்கப்பட்டது. இதுகுறித்து, வனத்துறை கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் இறந்த யானையின் உடலில் இருந்து கசிந்த திரவங்களை சேகரித்து ஆந்தராக்ஸ் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆய்வில், யானைக்கு ஆந்தராக்ஸ் நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இன்று உயிரிழந்த யானைக்கு கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் உடற்கூராய்வு நடத்தினர்.

அதில், யானையின் இதயம் மற்றும் நுரையீரலில் ரத்த கசிவு ஏற்பட்டு, நுரையீரல் செயலிழந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும், யானையிலிருந்து சேகரித்த மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ள மருத்துவர்கள் ஆய்வு முடிவின் அடிப்படையிலேயே ரத்த கசிவிற்காக காரணம் என்ன என்பது தெரியவரும், என தெரிவித்துள்ளனர்.
கோவை வனக் கோட்டத்தில் தொடர்ந்து யானைகள் பல்வேறு காரணங்கள் காரணமாக உயிரிழந்து வருவது வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை சின்னதடாகம் பகுதியில் நேற்று 20 வயது பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் வனத்துறையினரால் மீட்கப்பட்டது. இதுகுறித்து, வனத்துறை கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் இறந்த யானையின் உடலில் இருந்து கசிந்த திரவங்களை சேகரித்து ஆந்தராக்ஸ் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆய்வில், யானைக்கு ஆந்தராக்ஸ் நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இன்று உயிரிழந்த யானைக்கு கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் உடற்கூராய்வு நடத்தினர்.
அதில், யானையின் இதயம் மற்றும் நுரையீரலில் ரத்த கசிவு ஏற்பட்டு, நுரையீரல் செயலிழந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும், யானையிலிருந்து சேகரித்த மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ள மருத்துவர்கள் ஆய்வு முடிவின் அடிப்படையிலேயே ரத்த கசிவிற்காக காரணம் என்ன என்பது தெரியவரும், என தெரிவித்துள்ளனர்.
கோவை வனக் கோட்டத்தில் தொடர்ந்து யானைகள் பல்வேறு காரணங்கள் காரணமாக உயிரிழந்து வருவது வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.