தடாகம் அருகே யானை இறப்பு: நுரையீரல், இதயத்தில் ரத்த கசிவால் உயிரிழப்பு - கால்நடை மருத்துவர்கள் அறிக்கை

கோவை தடாகம் அருகே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானை நுரையீரல் மற்றும் இதயத்தில் ஏற்பட்ட ரத்த கசிவின் காரணமாக நுரையீரல் செயலிழந்து உயிரிழந்துள்ளது என்று பிரேத பரிசோதனை முடிவில் வெளியாகி உள்ளது.


கோவை: நேற்று, கோவை தடாகம் அருகே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானை நுரையீரல் மற்றும் இதயத்தில் ஏற்பட்ட ரத்த கசிவின் காரணமாக நுரையீரல் செயலிழந்து உயிரிழந்துள்ளது என்று பிரேத பரிசோதனை முடிவில் வெளியாகி உள்ளது.



கோவை சின்னதடாகம் பகுதியில் நேற்று 20 வயது பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் வனத்துறையினரால் மீட்கப்பட்டது. இதுகுறித்து, வனத்துறை கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவர்கள் இறந்த யானையின் உடலில் இருந்து கசிந்த திரவங்களை சேகரித்து ஆந்தராக்ஸ் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆய்வில், யானைக்கு ஆந்தராக்ஸ் நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இன்று உயிரிழந்த யானைக்கு கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் உடற்கூராய்வு நடத்தினர்.



அதில், யானையின் இதயம் மற்றும் நுரையீரலில் ரத்த கசிவு ஏற்பட்டு, நுரையீரல் செயலிழந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும், யானையிலிருந்து சேகரித்த மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ள மருத்துவர்கள் ஆய்வு முடிவின் அடிப்படையிலேயே ரத்த கசிவிற்காக காரணம் என்ன என்பது தெரியவரும், என தெரிவித்துள்ளனர்.

கோவை வனக் கோட்டத்தில் தொடர்ந்து யானைகள் பல்வேறு காரணங்கள் காரணமாக உயிரிழந்து வருவது வனத்துறையினர் மற்றும் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...