வால்பாறை அரசு மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவமனை ஊழியர்களுக்கு தீ தடுப்பு பற்றி விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தீப்பிடித்தால் எவ்வாறு அணைப்பது என்று தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்க விழிப்புணர்வு செய்தனர்.


கோவை: வால்பாறையில் அரசு மருத்துவமனையில் தீயணைப்புத்துறையினர் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே வனப்பகுதியில் காட்டு தீப்பிடித்து எரிந்து வருகிறது.

இதை தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் வீடுகளில் தீ பிடித்தால் எவ்வாறு தீயை அணைப்பது என்று தெரியாமல் இருப்பதால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் வால்பாறை தீயணைப்புத்துறையினர் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று எஸ்டேட் பகுதி தொழிற்சாலை அரசு அலுவலகங்கள் பள்ளிகள் போன்றவற்றை தீ பிடித்தால் எவ்வாறு அமைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.



இதில், ஒரு கட்டமாக வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவமனை ஊழியர்களுக்கு தீ தடுப்பு பற்றி விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தீப்பிடித்தால் எவ்வாறு அணைப்பது என்று செயல்முறை விளக்க விழிப்புணர்வு செய்தனர்.

இதில், மருத்துவமனை ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தீயணைக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...