வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவமனை ஊழியர்களுக்கு தீ தடுப்பு பற்றி விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தீப்பிடித்தால் எவ்வாறு அணைப்பது என்று தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்க விழிப்புணர்வு செய்தனர்.
கோவை: வால்பாறையில் அரசு மருத்துவமனையில் தீயணைப்புத்துறையினர் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே வனப்பகுதியில் காட்டு தீப்பிடித்து எரிந்து வருகிறது.
இதை தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் வீடுகளில் தீ பிடித்தால் எவ்வாறு தீயை அணைப்பது என்று தெரியாமல் இருப்பதால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் வால்பாறை தீயணைப்புத்துறையினர் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று எஸ்டேட் பகுதி தொழிற்சாலை அரசு அலுவலகங்கள் பள்ளிகள் போன்றவற்றை தீ பிடித்தால் எவ்வாறு அமைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதில், ஒரு கட்டமாக வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவமனை ஊழியர்களுக்கு தீ தடுப்பு பற்றி விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தீப்பிடித்தால் எவ்வாறு அணைப்பது என்று செயல்முறை விளக்க விழிப்புணர்வு செய்தனர்.
இதில், மருத்துவமனை ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தீயணைக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே வனப்பகுதியில் காட்டு தீப்பிடித்து எரிந்து வருகிறது.
இதை தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் வீடுகளில் தீ பிடித்தால் எவ்வாறு தீயை அணைப்பது என்று தெரியாமல் இருப்பதால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் வால்பாறை தீயணைப்புத்துறையினர் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று எஸ்டேட் பகுதி தொழிற்சாலை அரசு அலுவலகங்கள் பள்ளிகள் போன்றவற்றை தீ பிடித்தால் எவ்வாறு அமைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதில், ஒரு கட்டமாக வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவமனை ஊழியர்களுக்கு தீ தடுப்பு பற்றி விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தீப்பிடித்தால் எவ்வாறு அணைப்பது என்று செயல்முறை விளக்க விழிப்புணர்வு செய்தனர்.
இதில், மருத்துவமனை ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தீயணைக்கும் முறையைப் பற்றி தெரிந்து கொண்டனர்.