கோவையில் சரக்கு ஆட்டோ மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி…!

துடியலூர் - கோவில்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்த போது, எல்.ஜி.பி காலனி அருகே எதிரே வந்த, சரக்கு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (23). கூலி தொழிலாளி. இவரது மனைவி சௌந்தர்யா (21).இன்று காலை, அவர் தனது இருசக்கர வாகனத்தில் துடியலூர் - கோவில்பாளையம் சாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, எல்.ஜி.பி காலனி அருகே வந்த போது, எதிரே வந்தசரக்கு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கோகுலகிருஷ்ணன் வந்த இருசக்கர வாகனத்தின் மீதுமோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார்.

இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து, அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சரக்கு ஆட்டோ ஓட்டி வந்த சக்திவேல் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...