கோவை மாவட்ட ஆட்சியரை மாற்றக்கோரி, சாதி மதம் கட்சி சார்பற்ற விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டம்.

முதலமைச்சர், கோவை மாவட்ட ஆட்சியரை விசாரிக்க வேண்டும் என்றும் தங்கள் சங்கத்தின் மீது தவறு இருந்தால் தங்களுக்கு தண்டனை கொடுக்கலாம், இல்லையெனில் மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர்.


கோவை: சில தினங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைத் தீர்ப்பு கூட்டத்தில், சாதி மதம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர், அவர்களது கோரிக்கை மனுக்கள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதற்கு கேள்வி எழுப்புயதற்குமாவட்ட ஆட்சியர் அலட்சியமாக பதில் அளித்து அவமதித்ததாக கூறி,விவசாய சங்க தலைவர் கந்தசாமி உட்பட விவசாயிகள் சிலர் வெளிநடப்பு செய்தனர்.



பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தை கண்டித்தும் ஆட்சியருக்கு ஆதரவாக பல்வேறு விவசாய சங்கங்கள் குரல் கொடுத்தன. மேலும், கோவை ஆட்சியர் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்துள்ளார் எனவும், சில பேருடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு ஆளாக கூடாது, என்று தெரிவித்தனர்.



இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டை மீண்டும் முன் வைத்தும், மாவட்ட ஆட்சியரின் அந்த செயலை கண்டித்தும், ஆட்சியரை மாற்றக் கோரியும், கோவை பவர் ஹவுஸ் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதி மதம் கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சங்கத்தின் தலைவர் கந்தசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் கோவை மாவட்ட ஆட்சியரை விசாரிக்க வேண்டும் என்றும் தங்கள் சங்கத்தின் மீது தவறு இருந்தால் தங்களுக்கு தண்டனை கொடுக்கலாம்,இல்லையெனில் மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்து வேறு மாவட்ட ஆட்சியரை கோவைக்கு பணியமர்த்துமாறு கேட்டுக் கொண்டனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...