வார்டு 13: கோவையில் நெபுலைசர் மாஸ்க் அணிந்து சாலை பாதுகாப்பு சங்கத்தினர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் மனு.

மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் நெபுலைசர் மாஸ்க் அணிந்து வந்து, 13 ஆம் வார்டு பகுதியில் உள்ள காற்று மாசுபாட்டை உணர்த்தும் வகையில் சாலை பாதுகாப்பு சங்கத்தினர் நூதன முறையில் மனு அளித்தனர்.


கோவை: மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் நெபுலைசர் மாஸ்க் அணிந்து வந்து, 13 ஆம் வார்டு பகுதியில் உள்ள காற்று மாசுபாட்டைஉணர்த்தும் வகையில் சாலை பாதுகாப்பு சங்கத்தினர் நூதன முறையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் மனு அளித்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.



அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, கோவை மாநகராட்சி 13வது வார்டு உருமாண்டம்பாளையம் பகுதியில் தர்ஷன் அவென்யூ எதிரில் உள்ள தனியார் தோட்ட நிலத்தில் பழைய கார் உதிரிபாகங்கள் பிரிக்கும் கம்பெனி செயல்பட்டு வருகிறது.

இந்த கம்பெனியில் டயர்கள், மின் வயர்கள், கார் சீட் கவர்கள் கம்பெனியின் வெளியே வைத்து எரிக்கபடுவதாக தெரிகிறது. அதேபோல, அப்பகுதியில் உள்ள அலுமினியம் உருக்கும் ஆலையில் இருந்து வரும் புகையால் காற்று மாசு அடைவதாகவும்,ரசாயனக் கழிவுகள் பூமிக்குள் சென்று நிலத்தை பாதிக்கிறது.

இங்கு ஏற்படும் தீயால் அந்த பகுதி பெரும் புகை மண்டலமாக மாறுவதால், தர்ஷனா கார்டன், சீனிவாசா நகர். எஸ்.கே.வி கார்டன், வி.ஐ.பி கார்டன், சூர்யா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், இந்த அபுகை மண்டலம் காரணமாக இங்கு குடியிருப்பவர்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட நோய்கள் வருகிறது, என்று மனுவில் கூறியுள்ளனர்.

எனவே, இதுகுறித்துஉரிய நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினர் கவுண்டம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் மனு அளித்துள்ளனர்.



மனு அளிக்க சென்ற அவர்கள் நெபுலைசர் மாஸ்க் அணிந்து சென்றுமாவட்ட சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் நீலமேகத்திடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

மருத்துவமனையில் ஐ.சி .யூ யூனிட்டில் உள்ளது போல்நூதன முறையில் மூக்கில் நெபுலைசர் மாஸ்க் அணிந்து சென்று மனு அளித்தது அங்குள்ளவர்களை திகைப்படைய செய்தது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...