வடவள்ளி, வீரகேரளம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.285 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை அமைக்க நாளை டெண்டர் திறப்பு.

கோவை வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்பதற்கு ரூபாய் 285 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்பதற்கு ரூ. 285 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

2011-இல் கோவை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், ஒரு கிராம ஊராட்சி இணைக்கப்பட்டன. தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் நகராட்சிகளாக இருந்த பகுதிகளில் மட்டும் அம்ரூட் திட்டத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கு கழிவுநீர் சுத்தம் செய்யும் நிலையம் வெள்ளலூரில் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம், துடியலூர், காளப்பட்டி, வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி பேரூராட்சிகள், விளாங்குறிச்சி கிராம ஊராட்சி போன்ற இணைப்பு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

மேலே குறிப்பிட்ட இப்பகுதிகள் வளர்ந்து வரும் நிலையில், பாதாள சாக்கடை இல்லாதது குடியிருக்கும் மக்களை பெரிதும் பாதிக்கிறது. அப்பகுதியில் தொடர்ந்து பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டில் இப்பகுதிகளுக்கு பாதாள சாக்கடை அமைப்பதற்கு ஆசிய வங்கி பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்பதற்கு 285 கோடி ரூபாய் பாதாள சாக்கடை அமைக்க டெண்டர் விடப்பட்டு இருந்தது.

அதன் தொடர்ச்சியாக, நாளை அதற்கான டெண்டர் திறக்கப்படவுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இந்த பணியை மேற்கொள்ள இருக்கிறது. நாளை டெண்டர் முடிவு செய்யப்படுவதை தொடர்ந்து பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...