கோவை புல்லுக்காடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பை ஆய்வு செய்த அமைச்சர் அன்பரசன்..!

குடிநீர் சரிவர வருவதில்லை எனவும், குப்பைகளை எடுக்க வாகனங்கள் வந்தால் தங்களிடம் பணம் கேட்பதாகவும், உள்ளிட்ட அடுக்கடுக்கான குறைகளை அமைச்சரிடம் பொதுமக்கள் முன்வைத்தனர்.


கோவை: உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளையும் அங்கு கட்டப்பட்டு வரும் கட்டிடங்களையும், அடுமனையையும்(டோபி) குறு-சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்தார்.



புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு செய்யப்பட உள்ள பல்வேறு வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



பின்பு அங்கு வசித்து வரும் மக்களிடம் அங்குள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்த போது குடியிருப்பில் வசிக்கும் மக்கள் பல்வேறு குறைகளை அமைச்சரிடம் தெரிவித்தனர்.



அங்கு பல நாட்களாக மின்சாரம் சாலை வசதி தெரு விளக்குகள் இன்றி தவித்து வருவதாகவும், ரேசன் கார்டு மாற்றம், ஆதார் கார்டு மாற்றம் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை மாற்ற எவ்வித நடவடிக்கையும் மாநகராட்சி தரப்பிலிருந்து செய்து தரப்படவில்லை என தெரிவித்தனர்.



மேலும் குடிநீர் சரிவர வருவதில்லை எனவும், குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுப்பதில்லை எனவும், குப்பைகளை எடுக்க வாகனங்கள் வந்தால் தங்களிடம் பணம் கேட்பதாகவும், அமைச்சரிடம் தெரிவித்தனர். எனவே தங்கள் குறைகளை உடனடியாக நிறைவேற்றி தரும்படி கேட்டுக் கொண்டார்.

தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த அமைச்சர் மாவட்ட ஆட்சியரிடம் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.



மேலும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடமும் இனி குறைகள் இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறு கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இப்பகுதி மக்கள் கூறியுள்ள குறைகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் எனவும் அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மேலும் தற்பொழுது உள்ள திமுக ஆட்சி முதல்வன் இதனை மிகச் சிறப்பாகச் செயல்பட்ட கொண்டிருப்பதாகவும், இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு மக்கள் அளிக்கும் தொகையும் தற்பொழுது குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உட்பட குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...