காங்கேயம்பாளையம் அருகே வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், வாடகை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை: ஆப்ரேஷன் 2.0 என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை தடுப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை சூலூர் காங்கேயம்பாளையம் அருகே வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், சூலூர் ஆய்வாளர் மாதையன் தலைமையில், உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திர பிரசாத் உள்ளிட்ட போலீசார் சூலூர் காங்கேயம்பாளையம் அன்னலட்சுமி நகர் பகுதியில் உள்ள ஜெயபாண்டியம்மாள் (30) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பன்டில்களில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. முதல் கட்ட விசாரணையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சேர்ந்த மலைச்சாமி என்பவரது மனைவி ஜெயபாண்டியம்மாள், தற்போது திருப்பூர் மாவட்டம் கொம்பன்காட்ட புதூர் பகுதியில் வசித்து வருவதாகவும், அவர் கோவை மாவட்டம் சூலூர் காங்கேயம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, மதுரையை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (41) என்பவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, ஜெயபாண்டியம்மாளை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்தால் 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜேஷ் கண்ணாவை போலீசார் தேடி வருகின்றனர்.
இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை சூலூர் காங்கேயம்பாளையம் அருகே வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், சூலூர் ஆய்வாளர் மாதையன் தலைமையில், உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திர பிரசாத் உள்ளிட்ட போலீசார் சூலூர் காங்கேயம்பாளையம் அன்னலட்சுமி நகர் பகுதியில் உள்ள ஜெயபாண்டியம்மாள் (30) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பன்டில்களில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. முதல் கட்ட விசாரணையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சேர்ந்த மலைச்சாமி என்பவரது மனைவி ஜெயபாண்டியம்மாள், தற்போது திருப்பூர் மாவட்டம் கொம்பன்காட்ட புதூர் பகுதியில் வசித்து வருவதாகவும், அவர் கோவை மாவட்டம் சூலூர் காங்கேயம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, மதுரையை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (41) என்பவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஜெயபாண்டியம்மாளை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்தால் 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜேஷ் கண்ணாவை போலீசார் தேடி வருகின்றனர்.