கோவை சூலூரில் வாடகை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50-கிலோ கஞ்சா பறிமுதல் - மதுரையை சேர்ந்த பெண் கைது..!

காங்கேயம்பாளையம் அருகே வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், வாடகை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: ஆப்ரேஷன் 2.0 என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை தடுப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை சூலூர் காங்கேயம்பாளையம் அருகே வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், சூலூர் ஆய்வாளர் மாதையன் தலைமையில், உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திர பிரசாத் உள்ளிட்ட போலீசார் சூலூர் காங்கேயம்பாளையம் அன்னலட்சுமி நகர் பகுதியில் உள்ள ஜெயபாண்டியம்மாள் (30) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு பன்டில்களில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. முதல் கட்ட விசாரணையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சேர்ந்த மலைச்சாமி என்பவரது மனைவி ஜெயபாண்டியம்மாள், தற்போது திருப்பூர் மாவட்டம் கொம்பன்காட்ட புதூர் பகுதியில் வசித்து வருவதாகவும், அவர் கோவை மாவட்டம் சூலூர் காங்கேயம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, மதுரையை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (41) என்பவருடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.



இதையடுத்து, ஜெயபாண்டியம்மாளை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்தால் 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜேஷ் கண்ணாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...