சிங்காநல்லூர் குளம் விவகாரம்: கோவை மாநகராட்சி ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்..!

சிங்காநல்லூர் குளத்தில் தடையை மீறி மீன் பிடிப்பது ஆக்கிரமிப்பு அகற்றாமல் இருப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா நீதிமன்றத்தில் ஆஜரானார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள சிங்காநல்லூர் குளம் 288-ஏக்கர் பரப்பு கொண்டது. இப்பகுதியில் இயற்கை ஆர்வலர்கள் நடத்திய ஆய்வில் தாவரங்கள், பறவைகள் உள்ளிட்ட 120- வகையான பல்லுயிர்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

396-வகை தாவரங்கள் 160-வகையான பறவைகள் 62-வகையான பட்டாம்பூச்சிகள் 22-வகையான பாலூட்டிகள் என பல்வேறு உயிரினங்கள் இக்குளத்தை நம்பியிருக்கின்றன.

அதனால் இக்குளமானது நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக கோவை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டது. இக்குளத்தில் தடையை மீறி மீன் பிடிக்கப்பட்டது, கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டது.

குளத்தின் அருகே மீன்கள் வியாபாரமும் செய்யப்பட்டது என சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019-ல் தனிநபரால் வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில் தலைமை நீதிபதி பரத் சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணை நடைபெற்றதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சிக்கு 10-ஆயிரம் அபராதம் விதித்தும், கோவை மாநகராட்சி ஆணையரை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதனிடையே சிங்காநல்லூர் பகுதியில் பறவைகள், தாவரங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்து வரும் ‘க்யூப்’ எனும் அமைப்பினர் மரக்கன்றுகள் நடுவதற்கு அனுமதி தர வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர் அதற்கு தற்பொழுது உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...