சிங்காநல்லூர் குளத்தில் தடையை மீறி மீன் பிடிப்பது ஆக்கிரமிப்பு அகற்றாமல் இருப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள சிங்காநல்லூர் குளம் 288-ஏக்கர் பரப்பு கொண்டது. இப்பகுதியில் இயற்கை ஆர்வலர்கள் நடத்திய ஆய்வில் தாவரங்கள், பறவைகள் உள்ளிட்ட 120- வகையான பல்லுயிர்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
396-வகை தாவரங்கள் 160-வகையான பறவைகள் 62-வகையான பட்டாம்பூச்சிகள் 22-வகையான பாலூட்டிகள் என பல்வேறு உயிரினங்கள் இக்குளத்தை நம்பியிருக்கின்றன.
அதனால் இக்குளமானது நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக கோவை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டது. இக்குளத்தில் தடையை மீறி மீன் பிடிக்கப்பட்டது, கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டது.
குளத்தின் அருகே மீன்கள் வியாபாரமும் செய்யப்பட்டது என சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019-ல் தனிநபரால் வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில் தலைமை நீதிபதி பரத் சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணை நடைபெற்றதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சிக்கு 10-ஆயிரம் அபராதம் விதித்தும், கோவை மாநகராட்சி ஆணையரை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதனிடையே சிங்காநல்லூர் பகுதியில் பறவைகள், தாவரங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்து வரும் ‘க்யூப்’ எனும் அமைப்பினர் மரக்கன்றுகள் நடுவதற்கு அனுமதி தர வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர் அதற்கு தற்பொழுது உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள சிங்காநல்லூர் குளம் 288-ஏக்கர் பரப்பு கொண்டது. இப்பகுதியில் இயற்கை ஆர்வலர்கள் நடத்திய ஆய்வில் தாவரங்கள், பறவைகள் உள்ளிட்ட 120- வகையான பல்லுயிர்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
396-வகை தாவரங்கள் 160-வகையான பறவைகள் 62-வகையான பட்டாம்பூச்சிகள் 22-வகையான பாலூட்டிகள் என பல்வேறு உயிரினங்கள் இக்குளத்தை நம்பியிருக்கின்றன.
அதனால் இக்குளமானது நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக கோவை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டது. இக்குளத்தில் தடையை மீறி மீன் பிடிக்கப்பட்டது, கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டது.
குளத்தின் அருகே மீன்கள் வியாபாரமும் செய்யப்பட்டது என சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019-ல் தனிநபரால் வழக்கு தொடரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில் தலைமை நீதிபதி பரத் சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணை நடைபெற்றதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சிக்கு 10-ஆயிரம் அபராதம் விதித்தும், கோவை மாநகராட்சி ஆணையரை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதனிடையே சிங்காநல்லூர் பகுதியில் பறவைகள், தாவரங்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்து வரும் ‘க்யூப்’ எனும் அமைப்பினர் மரக்கன்றுகள் நடுவதற்கு அனுமதி தர வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர் அதற்கு தற்பொழுது உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.